சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சன்சத் ரத்னா விருதை பாரதீய ஜனதா கட்சித் தலைவரான அனுராக் தாகூருக்கு வழங்கினார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவரின் சிறப்பு வாய்ந்த செயல்திறனுக்காக இவருக்கு சன்சத் ரத்னா விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றி மூலம் இந்த சிறப்பு வாய்ந்த விருது அளிக்கப் பெற்ற இவர் பிஜேபியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தேர்வுக் குழுவால் வட இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினராகவும் அதைப் பெற்றுள்ளார்.
இந்த விருதானது முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J அப்துல் கலாமின் பரிந்துரைப்படி இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலாக்கத் திறனை கொண்டாடும் விதமாக 2010 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.