சமுத்திரயான் என்ற திட்டமானது 2026 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இது சென்னையில் உள்ள தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தினால் (NIOT) வடிவமைத்து உருவாக்கப்படுகிறது.
இந்த நீர்மூழ்கி வாகனத்திற்கு 'மத்ஸ்யா 6000' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது சாதாரணச் செயல்பாட்டின் போது 12 மணிநேரமும், மனிதப் பாதுகாப்புக்காக அவசரகாலச் செயல்பாடுகளின் போது 96 மணிநேரமும் இயங்கும் திறன் கொண்டது.
இந்த நீர்மூழ்கி வாகனம் ஆனது மூன்று பணியாளர்களை 6000 மீட்டர் ஆழத்திற்கு அனுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை ஆழ்கடல் பகுதிக்கு அனுப்பும் இந்தியாவின் இந்த முதல் திட்டமானது, ஆழ்கடல் வளங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்காகவும், பல்லுயிர் சார்ந்த பல்வேறு மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஆனது, மத்திய அரசின் நீல (கடல்சார்) பொருளாதாரக் கொள்கையை ஆதரிக்கும் வகையிலான மாபெரும் ஆழ்கடல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.