TNPSC Thervupettagam

சமூக நீதி கண்காணிப்புக் குழு

October 26 , 2021 1004 days 2981 0
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏழு உறுப்பினர்கள் அடங்கிய சமூக நீதி கண்காணிப்புக் குழுவினை நிறுவுவதாக அறிவித்தார்.
  • திராவிட சித்தாந்தவாதி சுப. வீரபாண்டியன் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குவார்.
  • தமிழ்நாடு முழுவதும் கல்வி, வேலைவாய்ப்பு, பணி அமர்வு, பதவி உயர்வு மற்றும் நியமனம் ஆகியவற்றில் சமூக நீதியானது சரியான முறையில் அமல்படுத்தப் படுகிறதா என இந்தக் குழு கண்காணிக்கும்.
  • மேலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவ்வப்போது மாநில அரசிற்குப் பரிந்துரைகளையும் இந்தக் குழு வழங்கும் 
  • இக்குழுவின் மற்ற உறுப்பினர்கள்
    • ஓய்வு பெற்ற இந்திய குடிமைப்பணி அதிகாரி K. தனவேல்
    • பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் துணை ஆளுநர் சுவாமிநாதன் தேவதாஸ்
    • தமிழ்க் கவிஞர் மனுஷ்யபுத்திரன்
    • ஆதிதிராவிடர் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதியினர் தொடர்பான சட்டங்களின் நிபுணர் A. ஜெய்சன்
    • R. ராஜேந்திரன்பொருளாதார நிபுணர்
    • G. கருணாநிதிஅனைத்திந்திய இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஊழியர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்