TNPSC Thervupettagam

சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட உயிரி எரிபொருள் (பயோ டீசல்)

May 6 , 2021 1174 days 539 0
  • மத்தியப் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் முதன்முறையாக உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்துத் தயாரிக்கப்பட்ட உயிரி எரிபொருள் (பயோடீசல்) வழங்கீட்டினைத் தொடங்கி வைத்தார்.
  • இது ‘ஆர்வத்தின் வெளிப்பாடு’ என்ற ஒரு திட்டத்தின் கீழ் (Expression of Interest) தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த திட்டமானது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட உயிரி எரிபொருளைக் கொள்முதல் செய்வதற்காக இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டது.
  • உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயினை சேகரித்து உயிரி எரிபொருளாக (பயோ டீசல்) மாற்றுவதற்கான ஒரு அமைப்பினை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
  • முதற்கட்டமாக உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் 7% அளவிலான பயோ டீசலானது டீசலுடன் கலக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்