April 2 , 2021
1211 days
1171
- புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர் டாக்டர் சரண்குமார் லிம்பாலே 2020 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் என்ற விருதினைப் பெற உள்ளார்.
- இந்த விருது அவருடைய “Sanatan” எனும் புத்தகத்திற்காக வழங்கப்பட உள்ளது.
- இந்த விருது ரூ.15 லட்ச ரூபாய் பரிசு, ஒரு சான்றிதழ், கவுரவ மாலை (Plaque) ஆகியவற்றை உள்ளடக்கியது.
- இந்த விருது நாட்டின் மிகவும் மதிப்பு மிக்க மற்றும் உயரிய இலக்கிய விருதாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு விருதாகும்.
- இது 1991 ஆம் ஆண்டில் KK பிர்லா அறக்கட்டளையால் தொடங்கப்பட்டதாகும்.
- டாக்டர் லிம்பாலேவின் “Sanatan” புத்தகம் 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
- “Sanatan” பட்டியல் இனத்தவர்களின் போராட்டங்கள் குறித்த ஒரு முக்கிய சமூக மற்றும் வரலாற்று ஆவணமாகும்.
Post Views:
1171