ஒவ்வொரு ஆண்டும் மே 04 அன்று சர்வதேசத் தீயணைப்பாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இது 1999 ஆம் ஆண்டு ஜனவரி 04 அன்று ஆஸ்திரேலியாவினால் உலகம் முழுவதும் மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட பரிந்துரைக்குப் பின்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்த முக்கியமான நாளில் ஆஸ்திரேலியாவின் புதர் தீயில் 5 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த நாளானது தீயணைப்பாளர்களின் உயிர்த் தியாகங்களை நினைவு கூர்கின்றது.
இத்தினமானது ஒவ்வொரு நாளும் உயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் செயல்படும் தீயணைப்பு வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்படுகின்றது.
சர்வதேச தீயணைப்பாளர்கள் தினத்தின் குறியீட்டில் உள்ள சிவப்பு மற்றும் நீல நிறங்களானது முறையே நெருப்பு மற்றும் நீரைக் குறிக்கின்றது.