TNPSC Thervupettagam

சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18

May 18 , 2019 1961 days 639 0
  • ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதி சர்வதேச அருங்காட்சியகத் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினத்தின் நோக்கம் கலாச்சாரப் பரிமாற்றங்களை ஏற்படுத்தும் அருங்காட்சியகத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
  • 1977 ஆம் ஆண்டில் சர்வதேச அருங்காட்சியகங்கள் ஆணையமானது முதலாவது சர்வதேச அருங்காட்சியகத் தினத்தை ஒருங்கிணைத்தது.
  • 2019 ஆம் ஆண்டில் இத்தினத்தின் கருத்துருவானது, “அருங்காட்சியகங்கள் கலாச்சார மையங்களாகும் : மரபின் எதிர்காலம்” என்பதாகும்.
  • 1753 ஆம் ஆண்டில் உலகின் முதலாவது பொது அருங்காட்சியகம் பிரிட்டனில் தொடங்கப்பட்டது.
  • 1851 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சென்னையில் உள்ள அரசாங்க அருங்காட்சியகம் அல்லது மதராஸ் அருங்காட்சியகம் கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திற்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்