கிராமப்புற குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்தல், கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் ஒட்டு மொத்த நலவாழ்வு ஆகியவற்றை மேம்படுத்துதல் போன்றவற்றில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆற்றும் பங்கினை இத்தினம் அங்கீகரிக்கிறது.
இந்தியாவில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகமானது 2016 ஆம் ஆண்டு முதல் இந்த தினத்தினை ராஷ்டிரிய மகிளா கிசான் திவாஸ் தினமாக அனுசரிக்கிறது.
வேளாண்மையில் மகளிரின் அதிகப் பங்கேற்பினை அதிகரிப்பதே இதன் நோக்கம் ஆகும்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Rural Women Cultivating good food for all” என்பதாகும்.