அமெரிக்கா - இந்தியா உத்திசார் பங்காளர் மன்றமானது (US-India Strategic Partnership Forum - USISPF), தனது 2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சிறப்புமிக்க விருதுக்காக மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவரான அஜய் பங்கா மற்றும் விப்ரோவின் தலைவரான அசிம் பிரேம்ஜி ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தப் புகழ்மிக்க விருதானது அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையேப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு இவர்களால் மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகளுக்காக இவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகரான ஜாரெட் குஸ்னெர் என்பவர் இச்சந்திப்பு நடைபெறும் போது இந்த விருதுகளை வெற்றியாளர்களுக்கு வழங்கவிருக்கின்றார்.
USISPF
2017 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இந்த இலாப நோக்கில்லா அமைப்பானது அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே இருநாட்டு மற்றும் உத்திசார் பங்காளர் உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று USISPFவின் 2வது வருடாந்திர தலைமைத்துவ மாநாடானது வாஷிங்டன் D.C யில் நடைபெற இருக்கின்றது.