2010 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 04 ஆம் தேதியன்று சர்வதேச சிவிங்கிப் புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
டாக்டர் லாவ்ரி மார்க்கர் என்பவர், ஓரிகானின் வின்ஸ்டனில் உள்ள வனவிலங்கு பூங்காவில் அது குட்டியாக இருந்தது முதல் தான் வளர்த்து வந்த கயாம் என்ற சிறுத்தையின் நினைவாக இந்த நாளை அறிவித்தார்.
கயாம் சிவிங்கிப் புலிகளுக்கு, மீண்டும் வனத்தில் விடுதலுக்கான முதல் ஆராய்ச்சி திட்டத்திற்காக பயிற்சியளிக்கப் பட்டதோடு, 1977 ஆம் ஆண்டில் அது நமீபியாவின் காட்டிற்குள் விடப்பட்டது.
சர்வதேச சிவிங்கிப் புலிகள் தினமானது வனவிலங்குப் பாதுகாப்பு தினத்துடன் ஒன்றி வருகிறது.
சிவிங்கிப் புலிகள் பூமியின் வேகமான விலங்கு எனப் பிரபலமாக அறியப் படுகிறது.
இது மூன்று வினாடிகளில் 70 மைல் வேகத்தை எட்டக் கூடியது.
தற்போது இந்த விலங்குகள் பெரும்பான்மையாக நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.
1954 ஆம் ஆண்டில் இந்திய அரசானது இந்த விலங்கினை அழிந்து போன ஒரு விலங்கு இனமாக அறிவித்தது.
இந்திய அரசாங்கம், நமீபியாவில் இருந்து சிவிங்கிப் புலிகளைக் கொண்டு வந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் பாதுகாத்து வருகிறது.