இத்தினமானது மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை பரப்புதல் மற்றும் பன்மொழித்துவத்தினை மேம்படுத்துதல் போன்றவற்றை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பன்மொழியைக் கற்பதற்கு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல்; சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” (Using technology for multilingual learning: Challenges and opportunities) என்பதாகும்.
இந்தத் தினமானது 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் பொது மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, 2002 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தில் இத்தினத்தின் அறிவிப்பினை வரவேற்று ஏற்றுக் கொண்டது.