TNPSC Thervupettagam

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பின் உலகக் கோப்பை 2019

March 2 , 2019 1968 days 576 0
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 முதல் 28 வரை புதுதில்லியில் ISSF உலகக் கோப்பை நடத்தப்பட்டது.
  • இது ISSF உலகக் கோப்பையின் வருடாந்திர நிகழ்வாகும். இது சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பால் (ISSF – International Shooting Sport Federation) நடத்தப்படுகின்றது.
  • இது ஜப்பானின் டோக்கியோ நகரில் நடத்தப்பட இருக்கும் 2020 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிப் போட்டியாகும்.
  • இந்த உலகக் கோப்பையில் ஹங்கேரியுடன் இணைந்து இந்தியா முதலிடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • கலப்பு அணிப் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சௌரப் சௌத்ரியும் மனு பேக்கரும் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
  • அபூர்வா சந்தேலா பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் வென்றதோடு, 2019 ஆம் ஆண்டின் துப்பாக்கிச் சுடும் விளையாட்டிற்கான உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று உலக சாதனையைப் படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்