வங்காளதேச சுற்றுச்சூழல் வழக்கறிஞர் ரிஸ்வானா ஹசன், 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தைரியமிக்க பெண்கள் (IWOC) விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறையால் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ள உலகின் 12 பெண்களில் இவரும் ஒருவராவார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், ஒடுக்கப்பட்ட வங்கதேச மக்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான தனது பணியில் இவர் தனித்துவமான தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.