தென்னாப்பிரிக்காவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரும், நிறவெறிக்கு எதிராக நீதி வேண்டி அவர் நீண்ட ஆண்டுகள் மேற்கொண்ட ஒரு போராட்டத்தினையும் இந்தத் தினம் நினைவு கூர்கிறது.
இத்தினமானது நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாளன்று கொண்டாடப் படுகிறது.
2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உங்களிடம் உள்ளதைக் கொண்டு, நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அதைக் கொண்டு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் " என்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையானது, 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மண்டேலா தினத்தை அனுசரிப்பதற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியது.
2014 ஆம் ஆண்டில் மனிதகுலத்திற்குச் சேவையாற்றுவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை கௌரவிப்பதற்காக நெல்சன் மண்டேலா பரிசினை வழங்கும் முறையை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறுவியது.