புலிகளைப் பாதுகாப்பது பற்றியும், அவற்றின் இயற்கையான வாழ்விடத்தைப் பாதுகாப்பது பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தை அனுசரிப்பதன் நோக்கமாகும்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஆசியாவில் 100,000 புலிகள் இருந்தன.
இன்றைய நிலவரப்படி 4,000க்கும் குறைவான புலிகள் மட்டுமே காடுகளில் உள்ளன.
2022 ஆம் ஆண்டிற்குள் அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது இத்தினத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "புலிகளின் எண்ணிக்கையை மீட்டெடுப்பதற்காக இந்தியா புலிகள் பாதுகாப்புத் திட்டத்தினை அறிமுகப் படுத்தச் செய்கிறது" என்பதாகும்.