அமெரிக்க உள்துறையானது சர்வதேச மதச் சுதந்திரச் சட்டத்திற்கு இணங்கும் வகையில் பல்வேறு பட்டியலில் பல்வேறு நாடுகளைத் தரவரிசைப் படுத்தியுள்ளது.
அதில் உள்ள இதர 8 நாடுகளில் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை மதச் சுதந்திர மீறலுக்கான குறிப்பிட்ட அளவில் கவலை கொள்ள வைக்கும் நாடுகள் (CPC - Country of Particular Concern) என்ற பட்டியலில் வைக்கப் பட்டுள்ளன.
மியான்மர், எரித்திரியா, ஈரான், நைஜீரியா, வட கொரியா, சவுதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவை அந்த இதர நாடுகளாகும்.
அமெரிக்க உள்துறையானது இந்தியா, ரஷ்யா, சிரியா மற்றும் வியட்நாம் ஆகியவற்றை CPC ஆக வகைப்படுத்தும் யுஎஸ்சிஐஆர்எப் (USCIRF) என்ற அமைப்பின் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வில்லை.
கோமோரோஸ், கியூபா, நிகரகுவா மற்றும் ரஷ்யா ஆகியவை மதச் சுதந்திரத்தின் மீது தீவிரமான விதிமீறல்களைச் சகித்துக் கொண்ட அல்லது அதில் ஈடுபட்ட அரசாங்கங்களுக்கான சிறப்புக் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளன.
அல் சஹாபாப், அல்குவைதா, போகோ ஹராம், ஹயத் தாஹ்ரின் அல்-ஷாம், ஹவுதீஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ்-கிரேட்டர் சஹாரா, ஐஎஸ்ஐஎஸ் மேற்கு ஆப்பிரிக்கா, ஜமாத் நஸர் அல்-இஸ்லாம் வால் முஸ்லீம்ன் மற்றும் தலிபான் ஆகியவை “குறிப்பிட்ட அளவில் கவலை கொண்ட நிறுவனங்களாக” வகைப்படுத்தப் பட்டுள்ளன.