சர்வதேச மாணவர்கள் மதிப்பீட்டுத் திட்டம் - பிசா 2021
November 10 , 2019 1749 days 610 0
பிசா தேர்வின் (Programme for International Student Assessment – PISA) தரத்திற்கு ஏற்ப, அத்தேர்வில் பங்கேற்கக் கூடிய பள்ளிகளின் ஆசிரியர்களையும் மாணவர்களையும் இந்தியா தயார்படுத்தி வருகின்றது.
PISA என்பது கணிதம், அறிவியல் மற்றும் வாசிப்பு ஆகியவற்றில் 15 வயது நிரம்பிய மாணவர்களின் அறிவு மற்றும் திறன்கள் ஆகியவற்றை மதிப்பிடுவதாகும்.
இது பொது, தனியார் மற்றும் தனியாரால் நிதியுதவி அளிக்கப்படும் பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளையும் உள்ளடக்கியுள்ளது.
OECD (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு- Organisation for Economic Co-operation and Development) அமைப்பானது 2000 ஆம் ஆண்டில் PISA என்ற தேர்வை அறிமுகப் படுத்தியது. அதன் பின்னர் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இத்தேர்வு நடத்தப் படுகின்றது.
இந்தியா 2009 ஆம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே PISA என்ற தேர்வில் பங்கேற்றுள்ளது.
ஒரு மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட இத்தேர்வில் இந்தியா பங்கேற்காமல் விலகி இருந்தது.
2021 ஆம் ஆண்டில் PISA தேர்வில் இந்தியாவின் பங்கேற்பிற்காக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது OECD அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.