இத்தினமானது 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
இது மறுபயன்பாடு, மீள்வு மற்றும் மறுசுழற்சி வீதங்களை அதிகரிப்பதற்கான நோக்கத்துடன் உலகெங்கிலுமுள்ள மின்னணுக் கழிவுகளைச் சரியான முறையில் அகற்றுவதை ஊக்குவிப்பதற்கான ஒரு தினமாகும்.
இந்த ஆண்டின் சர்வதேச மின்னணுக் கழிவு தினமானது மின்னணு தயாரிப்புப் பொருட்களுக்கு மறுசுழற்சி முறையை ஒரு நடைமுறையாக்குவதில் நாம் ஒவ்வொருவரும் கொண்டுள்ள முக்கியப் பங்கின் மீது ஈடுபாடு செலுத்துகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Consumer is the Key to circular Economy” என்பதாகும்.
இத்தினமானது 2018 ஆம் ஆண்டில் WEEE (Waste from Electrical and Electronic Equipment) என்ற மன்றத்தினால் உருவாக்கப்பட்டது.