இராமநாதபுரம் வனச்சரகர் S. சதீஷிற்கு சர்வதேச வனப்பாதுகாவலர் விருது வழங்கப் பட்டுள்ளது.
இவ்விருது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN - International Union for Conservation of Nature), பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம் (WCPA - World Commission on Protected Areas), சர்வதேச வனச்சரகர் கூட்டமைப்பு, உலகளாவிய வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வனப் பாதுகாப்பு நட்பு நாடுகள் ஆகியவற்றால் ஒன்றிணைந்து அறிவிக்கப்படுகிறது.
இவ்விருதினைப் பெறும் 10 நபர்களுள் இவரும் ஒருவராவார்.
சதீஷ் உத்தரகாண்ட்டிலுள்ள இராஜாஜி தேசியப் பூங்காவை சேர்ந்த மகேந்திர கிரியுடனும், கம்போடியா, மியான்மர், ரஷ்யா, ஜார்ஜியா, ஸாம்பியா, மடகாஸ்கர், கோட்டிவார் (ஜவரி கோஸ்ட்) மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டு வனப் பாதுகாவலர்களுடன் இவ்விருதினைப் பகிர்ந்து கொள்கிறார்.