சர்வதேச வலிப்பு நோய் தினமானது ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில், சர்வதேச வலிப்பு நோய் தினம் பிப்ரவரி 14 அன்று அனுசரிக்கப் பட்டது.
வலிப்பு நோய் பற்றிய உண்மைத் தகவல்களைப் பொது மக்களுக்குத் தெரியப்படுத்தி இந்த நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவது மற்றும் மேம்பட்ட சிகிச்சை, சிறந்த கவனிப்பு மற்றும் இந்த நோய் பற்றிய ஆராய்ச்சியில் அதிக முதலீடு ஆகியவற்றின் அவசியம் குறித்துப் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை சர்வதேச வலிப்பு நோய் தினத்தின் நோக்கமாகும்.