சர் சையது அகமது கான், சமூக முன்னேற்றத்திற்கான பல்வேறு சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதிலும், இஸ்லாமியர்களிடையே நவீனக் கல்வியின் முக்கியத்துவத்தை பிரச்சாரம் செய்வதிலும் புகழ் பெற்றவர் ஆவார்.
அவர் 1864 ஆம் ஆண்டில் காசிபூரில் அறிவியல் சங்கத்தை நிறுவினார்.
அவர் இஸ்லாமியர்களிடையே நவீனச் சிந்தனைகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக 1870 ஆம் ஆண்டில் தஹ்சிப்-உல்-அக்லாக் என்ற புகழ்பெற்ற மாத இதழினையும் தொடங்கினார்.
1875 ஆம் ஆண்டில் அவர் ஏழு மாணவர்களைக் கொண்டு, பின்னர் அலிகார் இஸ்லாமிய பல்கலைக் கழகம் என்று அழைக்கப்படுகின்ற மதரஸா-துல்-உலூம் எனப்படும் (AMU) கல்வி நிறுவனத்திற்கான அடித்தளத்தினை அமைத்தார்.
1877 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் தேதியன்று முகமதிய ஆங்கிலோ-ஓரியண்டல் (MAO) கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
1920 ஆம் ஆண்டில் இந்தக் கல்லூரியானது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாக மாற்றம் செய்யப்பட்டுப் பல்கலைக்கழக அந்தஸ்தினை அடைந்தது.