TNPSC Thervupettagam

சளி மாதிரியை அஞ்சல்துறை வழியாக அனுப்பும் வசதி

September 21 , 2018 2128 days 682 0
  • சுகாதார மற்றம் குடும்ப நலத்துறை அமைச்சகமானது (MOHFW - Union Ministry of Health and Family Welfare) காசநோய் (TB) நோய் கண்டறிதலுக்கான சளி மாதிரியை போக்குவரத்து மூலம் கொண்டு வருவதற்கான முன்னோட்டத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த போக்குவரத்து புது டெல்லியின் காரவால் நகரின் அஞ்சல் துறையின் சேவையை பயன்படுத்துவதன் மூலம் செய்யப்படுகிறது.
  • இது TB நோயாளிகளின் பொருத்தமான மேலாண்மைக்கும் நோய் பரவுதலை குறைப்பதற்கும் உதவும்.
  • மேலும் சுகாதார அமைச்சகமானது ‘நிக்சய் பதிப்பு0’ என்ற பயனர் இடைமுகம் மற்றும் தரவு கட்டமைப்புகளுடன் கூடிய இணையதள அடிப்படையிலான செயலியைத் தொடங்கியுள்ளது.
  • நிக்சய் ஆனது திருத்தப்பட்ட தேசிய காசநோய் திட்டத்தின் கீழ் (RNTP - Revised National Tuberculosis Programme) TB நோயாளிகளை திறம்பட கண்காணிப்பதற்கான வலை அடிப்படையிலான ஒரு தீர்வாகும்.
  • இது MOHFW யின் மத்திய TB பிரிவுடன் (CTB - Central TB Division) இணைந்து தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்டு மத்திய சுகாதார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்