சவுதி அரேபியாவின் ஒரு மிகப்பெரிய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமானது இறுதியாக அதன் ஆரம்பப் பொது வழங்கலைத் (Initial Public Offering - IPO) தொடங்கியுள்ளது.
இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 1.5 டிரில்லியன் டாலர்கள் ஆகும். இது அதன் மதிப்பை 20 பில்லியன் டாலர்கள் முதல் 40 பில்லியன் டாலர்கள் வரை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எரிசக்தி அல்லாத தொழில் துறைகளை உருவாக்குவதற்கும் வருவாய் முறைகளை பல்வகைப் படுத்துவதற்கும் வேண்டிய பில்லியன்களை திரட்டுவதன் மூலம் சவூதியில் ஒரு வலுவான பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள IPO வடிவமைக்கப் பட்டுள்ளது.
இது போன்ற முறையில் திரட்டப்பட்ட மிக அதிக அளவு நிதியானது சீனாவின் மின்னணு - வணிக நிறுவனமான அலிபாபா (2014 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் 25 பில்லியன் அமெரிக்க டாலர்) நிறுவனத்திடம் உள்ளது.