சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மான் ரியாத் நகரில் இந்த மன்றத்தினைத் திறந்து வைத்துள்ளார்.
மேலும் உலக மீத்தேன் உறுதிப்பாட்டில் சவுதி அரேபியா இணைவதாகவும் அவர் அறிவித்தார்.
சவுதி அரேபியா உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடாகும்.
இது அமெரிக்காவின் இலக்கிற்கு அடுத்து 10 ஆண்டுகள் கழித்து 2060 ஆம் ஆண்டுக்குள் நிகர சுழிய அளவிலான பசுமை வீட்டு வாயு உமிழ்வினை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது.
உலகின் 2வது மிகப்பெரிய வாயு உமிழ்வு நாடான அமெரிக்கா 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர சுழிய நிலையை அடைய உறுதி பூண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய மற்றும் 3வது மிகப்பெரிய வாயு உமிழ்வு நாடுகளான சீனாவும் இந்தியாவும் இந்தக் காலவரையறைக்கு வேண்டி ஒரு உறுதியினை மேற்கொள்ள வில்லை.
நிகர சுழியம் என்பது தான் பிடிப்பதை விட குறைவாக பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதாகும்.