TNPSC Thervupettagam

சவுரியா ஏவுகணை சோதனை

October 9 , 2020 1419 days 617 0
  • இந்தியாவானது அணு ஆயுதத் திறன் கொண்ட சவுரியா ஏவுகணையின் புதிய பதிப்பை ஒடிசாவின் பாலசோரில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • புதிய பதிப்பு கொண்ட இந்தச் சவுரியா வகை ஏவுகணையானது செயல்படுத்த எளிதாகவும் தற்பொழுதுள்ள ஏவுகணைகளுடன் ஒப்பிடப்படும் பொழுது இலகுரகத்  தன்மையுடையதாகவும் உள்ளது.
  • இது இரண்டு நிலை கொண்ட ராக்கெட் ஏவுகணையாகும். இது டிஆர்டிஓ-வினால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது மீயொளி வேகம் கொண்ட, நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஒரு ஏவுகணையாகும். இதன் வரம்பு 700-1000 கிலோ மீட்டராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்