இரண்டு மாத கால சாகர் மைத்ரி (SM)-4 திட்டத்தின் கீழ் INS சாகர்த்வானி கப்பலானது புறப்பட்டுள்ளது.
இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகத்திற்கு (NPOL) சொந்தமான கடல்சார் ஆராய்ச்சிக் கப்பல் ஆகும்.
இது சமூக-பொருளாதார அம்சங்களில் நெருக்கமான ஒத்துழைப்பை வளர்ப்பதையும், இந்தியப் பெருங்கடலின் விளிம்பு பகுதியில் அமைந்த (IOR) நாடுகளில் அறிவியல் ஆய்வுகளை, குறிப்பாக கடல் ஆராய்ச்சித் துறையின் ஆய்வுகளை மேம்படுத்தச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பின் கீழ், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது MAITRI எனப்படும் முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
MAITRI என்பது 'கடல் சார்ந்த மற்றும் அது தொடர்பான பல் துறைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி முன்னெடுப்பு' என்பதன் பெயர் சுருக்கமாகும்.
'கடல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு' என்ற களத்தில் இந்தியப் பெருங்கடலின் விளிம்பு பகுதியில் அமைந்த (IOR) நாடுகளுடன் நீண்ட கால ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் இந்த முன்னெடுப்பு கவனம் செலுத்துகிறது.