முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி M. ராஜேந்திரன் எழுதிய வரலாற்று நாவலான காலா பாணி (கருப்பு நீர்) என்ற புத்தகமானது 2022 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்றுள்ளது.
சிவகங்கையை ஆண்ட வேங்கை பெரிய உடையண்ண தேவர், காளையார்கோயில் போருக்குப் பிறகு ஆட்சி செய்த சின்ன மருதுவின் மகன் துரைசாமி ஆகியோர் உட்பட 72 பேர் தோல்வியடைந்து நாடு கடத்தப்பட்டதை இப்புத்தகம் சித்தரிக்கிறது.
ஆங்கிலேயர்களுக்கும் மருது சகோதரர்களுக்கும் இடையே நடைபெற்ற இந்தப் போரானது காளையார்கோயில் பகுதியில் உள்ள காடுகளில் 1801 ஆம் ஆண்டில் ஆறு மாதங்கள் வரை நடைபெற்றது.
இந்தப் போரில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, மருது சகோதரர்கள் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதியன்று தென் தமிழ்நாட்டில் அமைந்த திருப்பத்தூரில் தூக்கிலிடப் பட்டனர்.
கப்பலில் ஏற்றப்பட்ட 72 பேரின் நாடு கடத்தல் பயணமானது 1802 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதியன்று தொடங்கிய நிலையில், அவர்கள் 62 நாட்களுக்குப் பிறகு பினாங் பகுதியினை அடைந்தனர்.
பெரிய உதயண்ண தேவர் மற்றவர்களிடமிருந்துப் பிரிக்கப்பட்டு சுமத்ரா தீவிற்கு அனுப்பப் பட்டு அங்கு அவர் நான்கு மாதங்கள் மட்டுமே வாழ்ந்தார்.
1820 ஆம் ஆண்டில் துரைசாமி உட்பட 11 பேர் இந்திய நாட்டிற்குத் திரும்பினார்கள்.