இதன் தொடக்க விழா நிகழ்வில் கஜகஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவும் ஈரானும் 2016 ஆம் ஆண்டு மே மாதத்தின் போது இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஷாஹித் பெஹெஷ்தி என்ற துறைமுகத்தில் உள்ள கப்பல் நிறுத்தங்களுள் ஒன்றைப் புதுப்பிப்பதற்கு இந்தியா ஒப்புக் கொண்டது.
இந்தத் துறைமுகத்தில் உள்ள 600 மீட்டர் நீளமுள்ள ஒரு கொள்கலன் கையாளும் மையத்தினைப் புனரமைப்பதற்கும் இந்தியா ஒப்புக் கொண்டது.
2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தியா ஆப்கானிஸ்தானுக்குச் சாபஹார் துறைமுகம் வழியாக கோதுமையை முதல்முறையாக ஏற்றுமதி செய்தது.
இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் 2016 ஆம் ஆண்டில் சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்தச் செய்வதற்கான ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
முத்தரப்பு போக்குவரத்து மற்றும் இடம் பெயர்வு வழித்தடத்தை அமைப்பதற்கும் இந்த நாடுகள் ஒப்புக் கொண்டன.