2021 ஆம் ஆண்டிற்கான ஒரு சிறந்தப் பெண் ஊடகவியலாளருக்கான சாமேலி தேவி ஜெயின் விருது ஆரிஃபா ஜோஹாரிக்கு வழங்கப்பட்டது.
ஊடக அறக்கட்டளை இந்த விருதினை அறிவித்துள்ளது.
ஆரிஃபா ஜோஹாரி மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள 'ஸ்க்ரோல் நிறுவனத்தில்’ பணி புரிகிறார்.
சாமேலி தேவி ஜெயின் விருது என்பது சமூக மேம்பாடு, அரசியல், சமத்துவம், பாலின நீதி, சுகாதாரம், போர் மற்றும் மோதல்கள் மற்றும் நுகர்வோர் விழுமியங்கள் போன்ற கருப்பொருள்களைப் பற்றி அறிக்கைகளைத் தயார் செய்த இந்தியாவின் பெண் ஊடகப் பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகைத் துறையில் ஆண்டுதோறும் வழங்கப் படுகின்ற ஒரு மிகவும் மதிப்பு மிக்க அங்கீகாரமாகும்.