2019 ஆம் ஆண்டு ஜூலை 02 முதல் 07 வரை தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மன்றத்தின் (South Asian Association for Regional Cooperation - SAARC) 9-வது பதிப்பு இலங்கையின் கொழும்புவில் நடத்தப்பட்டது.
இது சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆப்கானிஸ்தான், வங்க தேசம், பூட்டான், இந்தியா, மாலத் தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களை காட்சிப்படுத்தியது.
வங்காள மொழித் திரைப்படமான நாகர்கீர்த்தன் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இத்திரைப்படத்தை இயக்கிய கவுசிக் கங்குலி சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றுள்ளார்.