TNPSC Thervupettagam

சாலைப் போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் – நவம்பர் 21

November 24 , 2023 239 days 194 0
  • சாலைப் போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் ஆனது 1993 ஆண்டில் ரோடு பீஸ் என்ற அமைப்பினால் தொடங்கப்பட்டது.
  • 2005 ஆம் ஆண்டில், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் ஒவ்வொரு மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் இந்த உலகளாவியத் தினம் அனுசரிக்கப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்தது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘நினைவில் கொள்தல். ஒத்துழைப்பு. செயல்படுதல்’ என்பதாகும்.
  • உலகிலுள்ள சாலைகளில் சுமார் ஒவ்வொரு 24 வினாடிகளுக்கும் ஒருவர் விபத்தினால் இறக்கிறார் என்ற நிலையில், இதில் 90% இறப்புகள் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நடைபெறுகின்றன.
  • இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் சாலை விபத்துக்களால் சுமார் 1.68 லட்சம் பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்