ஜார்க்கண்டின் சாஹிப்கஞ்சில் கட்டப்பட்ட பல்முனை சரக்கு முனையமானது (Multi-Modal Terminal - MMT) செயல்பாட்டிற்கு வருகின்றது.
இது தேசிய நீர்வழிப் பாதை -1 (கங்கை நதி) இல் உள்ள இரண்டாவது பல்முனை சரக்கு முனையம் ஆகும்.
ராஜ்மஹாலில் உள்ள உள்ளூர்ச் சுரங்கங்களில் இருந்து உள்நாட்டு நிலக்கரியை கொண்டு செல்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கும்.
இணைப்பு:
நீர்வழிப் பாதை வழியாக இந்தியா - நேபாளம் ஆகியவற்றிற்கு இடையே சரக்குப் போக்குவரத்து.
வங்க தேசம் வழியாக நதி மற்றும் கடல் வழி ஆகியவற்றின் மூலம் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது கடல் பகுதிக்கு அப்பால் உள்ள பகுதியை கொல்கத்தா, ஹால்டியா மற்றும் வங்காள விரிகுடாவுடன் இணைத்துள்ளது.
முதலாவது MMT ஆனது 2018 ஆண்டு நவம்பர் அன்று வாரணாசியில் செயல்பாட்டுக்கு வந்தது.
பெரிய கப்பல்களின் பயணத்திற்காக, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மற்றும் மேற்கு வங்காளத்தின் ஹால்டியா ஆகியவற்றிற்கிடையே இருக்கும் கங்கை நதியின் பாதையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக MMTகள் கட்டப்படுகின்றன.