TNPSC Thervupettagam

சிஎப்எல் விளக்குகள் மீதான தடை – கேரளா

February 11 , 2020 1662 days 663 0
  • நீடித்த ஆற்றல் கொள்கையின் ஒரு பகுதியாக 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து சிஎப்எல் விளக்குகள் மற்றும் ஒளிர்வு விளக்குகள் (இழை) ஆகியவற்றின் விற்பனைக்கு கேரள மாநில அரசு தடை விதிக்க இருக்கின்றது.
  • இது அம்மாநிலத்தின் உர்ஜ கேரளா என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “மின்னிழையற்ற கேரளா” என்பதன் வரிசையில் அமைந்துள்ளது.
  • மின்னிழையற்ற கேரளா என்ற திட்டமானது கேரள மாநில மின் வாரியம் மற்றும் கேரள ஆற்றல் மேலாண்மை மையம் ஆகியவற்றினால் செயல்படுத்தப் படுகின்றது.
  • உர்ஜ கேரளா திட்டம் என்பது ஒரு ஆற்றல் உற்பத்தி மற்றும் சேமிப்புத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்