100 ஆண்டுகள் பழமையான “சிந்தாமணி பதய நாடகத்தினை” நடத்துவதற்கு ஆந்திர அரசு தடை விதித்துள்ளது.
இந்த நாடகமானது சமூகச் சீர்திருத்தவாதியான கள்ளக்குறி நாராயண ராவ் என்ற நாடக ஆசிரியரால் 1920 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.
இந்த நாடகமானது பஜனைகளைப் பாடி மோட்சத்தைக் கண்டறியும் தேவதாசியும் கிருஷ்ணனின் பக்தையுமான சிந்தாமணியைப் பற்றியதாகும்.
இதன் அசலான நாடகமானது சில சமூக கருத்துகளைக் கொண்டிருந்தாலும் பல ஆண்டுகளாக இது பொழுதுப் போக்குக்கான ஒன்றாக மாற்றப்பட்டது.
ஆரிய வைசியச் சமூகத்தினர் இந்த நாடகங்கள் தங்களை எதிர்மறையாக சித்தரிப்பதாக கூறி, அவற்றைத் தடை செய்யுமாறு பல ஆண்டுகளாக அரசுகளிடம் மனு அளித்து வந்துள்ளனர்.