இந்தியாவில் சிந்து சமவெளியைச் சேர்ந்த ஒரு மாபெரும் இடுகாடு இருந்ததை அறிவியலாளர்கள் வெளிக் கொணர்ந்துள்ளனர்.
சிந்து சமூகத்தினைச் சேர்ந்த வகையில் குறைந்தது 500 கல்லறைகள் இங்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தற்போது மதிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்தக் கல்லறைகளில் 100க்கும் மேற்பட்ட வளையல்கள் மற்றும் ஓடுகளால் செய்யப்பட்ட 27 மணிகள் போன்ற கலைப் பொருட்கள் காணப்படுவதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கல்லறைகள் வெவ்வேறு திசைகளைக் காட்டும் மணற்கற்களால் ஆன நடு கற்கள் உள்ளிட்ட தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன.
இதில் சில நீள்வட்ட வடிவிலும் மற்றவை செவ்வக வடிவிலும் உள்ளன.
குழந்தைகள் புதைக்கப்பட்ட சிறிய கல்லறைகளும் இங்கு உள்ளன.