TNPSC Thervupettagam

சிப்கோ இயக்கத்தின் 50வது ஆண்டு நிறைவு

March 31 , 2024 110 days 279 0
  • 1973 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தற்போதைய உத்தரகாண்ட் மாநிலத்தில் (சாமோலி கோபெஸ்வர்) தொடங்கிய சிப்கோ என்ற இயக்கமானது அதன் 50வது ஆண்டினை நிறைவு செய்துள்ளது.
  • இதில் கிராம மக்கள், குறிப்பாக கிராமப் புறப் பெண்கள், காடழிப்பு மற்றும் வணிகப் பயன்பாட்டிற்காக மரங்கள் வெட்டப்படுவதைத் தடுப்பதற்காக மரங்களைக் கட்டிப் பிடித்து அதற்கான எதிர்ப்பினை தெரிவித்தனர்.
  • இந்த இயக்கத்திற்கு இந்தி மொழியில் "அணைத்துக் கொள்ளுதல்" என்று பொருள் படும் சிப்கோ என்ற சொல் கொண்டு பெயரிடப்பட்டது.
  • சுந்தர்லால் பகுகுணா மற்றும் சாந்தி பிரசாத் பட் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளூர்ச் சமூகங்களை அணி திரட்டுவதிலும், இந்த இயக்கத்திற்கான தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஆதரவினைத் திரட்டுவதிலும் முக்கியப் பங்கு வகித்தனர்.
  • இதன் 50வது ஆண்டு நிறைவானது, மாறுதலைக் கொண்டு வருவதில் பொது மக்களின் பங்களிப்பு கொண்டுள்ள ஆற்றல் குறித்த நினைவூட்டலாகவும், உலகம் முழுவதும் நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் இயக்கங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்