அருணாச்சலப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சியோம் பாலம் சமீபத்தில் திறக்கப் பட்டது.
இந்த உள்கட்டமைப்புத் திட்டமானது எல்லைச் சாலைகள் அமைப்பினால் (BRO) நிறைவு செய்யப்பட்டது.
இது அலோங்-யிங்கியோங் சாலையில் அமைந்துள்ளது.
சியோம் பாலம் ஆனது படைப்பிரிவுகளை நிலைநிறுத்தச் செய்வதற்கான கால தாமதத்தினைக் குறைப்பதிலும், கனரக உபகரணங்கள் மற்றும் இயந்திர மயமாக்கப் பட்ட வாகனங்களின் போக்குவரத்தினைப் பெருமளவில் மேம்படுத்தவும் உதவும்.