15வது உலக வனவியல் மாநாடானது, தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்றது.
அதில் சியோல் வனப் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இந்நிகழ்ச்சியை தென் கொரிய அரசாங்கம் சியோல் நகரில் நடத்தியது.
உலக வனவியல் மாநாடானது ஐந்து நாட்களுக்கு நடத்தப்பட்டது.
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) இந்த மாநாட்டினை நடத்தியது.
பல்லுயிர்த் தன்மை இழப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் பாலைவனமாக்கல் போன்ற உலகளாவிய சுற்றுச்சூழல் மற்றும் வனம் தொடர்பான பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படுகிறது.
மேலும், இந்த நிகழ்வில் பல்வேறு தீர்வுகள் வகுக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன.
சியோல் வனப் பிரகடனமானது, சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்குகளை 2030 ஆம் ஆண்டிற்குள் அடைய, உலகம் முழுவதும் உள்ள நிலப்பரப்பு மற்றும் வனங்களின் மறுசீரமைப்புக்கான முதலீட்டினை மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.
முதல் உலக வனவியல் மாநாடானது 1926 ஆம் ஆண்டில் இத்தாலி நகரில் நடத்தப் பட்டது.