ஜப்பானின் கட்டடப் பொறியாளர் சமூக அமைப்பானது (Japan Society of Civil Engineers – JSCE) டெல்லி மெட்ரோ இரயிலுக்கான ‘முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் திட்டப் பணிகளுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க சிறந்த கட்டடப் பொறியியல் சாதனை விருதினை’ வழங்கியுள்ளது.
டெல்லி மெட்ரோ இரயில் திட்டமானது ISCE அமைப்பினால் “உயர்தர உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” என அழைக்கப் பட்டது.
இந்த விருதானது உலகெங்கிலும் உள்ள கட்டடப் பொறியியல் தொழில்நுட்பத்தின் மேம்பாட்டினை எடுத்துக் காட்டும் மிகவும் குறிப்பிடத்தக்க திட்டங்களுக்கு வழங்கப் படுகிறது.