இந்தியாவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பாவுக்கு சிங்கப்பூரின் மதிப்பு மிக்க இராணுவ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது பிங்கட் ஜசா ஜெமிலாங் (டென்டெரா) அல்லது சிறந்தச் சேவைப் பதக்கம் (இராணுவம்) என அறியப்படுகிறது.
இந்தியக் கடற்படைக்கும் சிங்கப்பூர் கடற்படைக்கும் இடையே வலுவான மற்றும் நீண்ட கால இருதரப்புப் பாதுகாப்பு உறவை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய சிறந்தப் பங்களிப்புகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.