சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருது
February 2 , 2021
1271 days
631
- இந்தியத் தேர்தல் ஆணையமானது ”சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருது - 2020” என்ற விருதிற்காக 17 அதிகாரிகள் மற்றும் அமைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.
- இந்த விருதானது ஜனவரி 25 அன்று நடைபெற்ற தேசிய வாக்காளர் தின அனுசரிப்பின் போது வழங்கப்பட்டது.
- மறைந்த இந்தியக் காவல்துறைப் பணி அதிகாரி மற்றும் பூர்னியாவின் தலைமைக் காவல் துறை ஆய்வாளரான பினோத் குமார் அவர்களுக்கு இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
- பூர்னியா மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான நடைமுறைகளை ஆய்வு செய்யும் போது இவருக்கு கோவிட்- 19 நோய்த் தொற்று ஏற்பட்டது.
- இதுவே அவரது எதிர்பாராத இறப்பிற்கு வழி வகுத்தது.
- இந்த நிகழ்வின் போது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் டிஜிட்டல் மதிப்பானது (e-EPIC) வெளியிடப் பட்டது.
- வாக்காளர் கல்வியறிவு மற்றும் விழிப்புணர்விற்காக ரேடியோ மிர்ச்சிக்கு தேசிய ஊடக விருதானது வழங்கப்பட்டுள்ளது.
Post Views:
631