டிரான்ஸ்பேரன்சி சர்வதேச நிறுவனத்தால் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் மாநிலங்களால் பின்தொடரப்படும் சிறந்த வழிமுறைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் அசாம் முதலிடத்தைப் பிடித்திருக்கின்றது.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவால் அது பின்தொடரப்படுகின்றது.
பட்டியலின் கடைசி இடங்களில் மேகாலயா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகியன உள்ளன.
இந்த ஆய்வு பின்வரும் நான்கு காரணிகளைக் கொண்டது.
பொது வெளியீடு
நிதிநிலை அறிக்கைத் தயாரிக்கும் முறை
நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான நிதி மேலாண்மை
நிதிநிலை அறிக்கையை மிகுந்த வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் குடிமக்களுக்கு அறிமுகமானதாகவும் மாற்றிட மேற்கொள்ளப்படும் முயற்சிகள்.
29 மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களில் பொது வெளியில் ஒரு குடிமக்கள் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட ஒரே மாநிலம் அசாம் மட்டுமே ஆகும்.
மாநிலத்தின் 17 மாவட்டங்களில் நிதிநிலை விழிப்புணர்வை நடத்தியிருக்கின்ற வகையில் இருக்கும் ஒரே அரசாங்கம் அசாம் அரசாங்கம் மட்டுமே ஆகும்.