TNPSC Thervupettagam

சிறப்புப் புலிகள் படை – உத்தரகாண்ட்

September 11 , 2019 1776 days 581 0
  • கார்பெட் புலிகள் காப்பகத்திற்காக சிறப்புப் புலிகள் படையை (Special Tiger Force - STF) அமைக்க உத்தரகாண்ட் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்தப் படையானது 85 பணியாளர்களைக் கொண்டிருக்கும். கார்பெட் புலிகள் காப்பகத்தில் பாதுகாப்பின் இரண்டாவது நிலை அடுக்காகச் செயல்பட இப்படை உதவும்.
  • STPF ஆனது காப்பகத்தின் எல்லைகளில் அமைந்துள்ள கிராமங்கள் வழியாக வனப் பகுதிக்குள் சட்டவிரோத மனித ஊடுருவலைத் தடுப்பதற்குப் பயனுள்ளதாக இருக்கும்.
  • இந்த முடிவானது காப்பகங்களில் இருக்கும் புலிகளுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்கான மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி அமைந்திருக்கின்றது.

முதல் நிலை

வனப் பாதுகாவலர்களினால் மேற்கொள்ளப்படும் வழக்கமான ரோந்துப் பணி

இரண்டாம் நிலை

STPF

மூன்றாம் நிலை

வேட்டையாடுவதைத் தடுப்பதற்காகத் தகவல் சேகரிப்பு நடைமுறைகள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்