இந்தியாவில் உள்ள முந்தைய சிறுத்தை வாழ்விடப் பகுதியில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப் படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன.
8 சிறுத்தைகள் (4 ஆண் சிறுத்தை மற்றும் 4 பெண் சிறுத்தை) 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவை வந்தடையும்.
அவை மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் மீண்டும் அறிமுகப் படுத்தப் படும்.
இவை தற்போது இந்தியாவில் அழிந்து விட்ட இனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா ஒவ்வோர் ஆண்டும் 8 முதல் 10 சிறுத்தைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில், நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மொத்தம் 50 சிறுத்தைகள் இந்தியாவிற்கு இடம் மாற்றப்படும்.