நீலகிரியின் மிகப் பலவீனமான சூழலியலைக் கருத்தில் கொண்டு சில்ஹல்லா என்ற நீரேற்று நீர்மின் நிலைய மின்னாற்றல் சேமிப்புத் திட்டத்தினை உடனே கைவிடுமாறு சில்லஹல்லா சுற்றுச்சூழல் சமூகப் பாதுகாப்பு சங்கம் (SESPA) வலியுறுத்தியுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த நீர்மின் நிலையமானது, 10 கி.மீ நீரேற்றுக் குழாயுடன் கூடிய இரண்டு அணைகளைக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதோடு மேலும் இது 25 கிராமங்களின் நடுவில் உருவாக்கப்பட உள்ளது.
சுமார் 1,000 ஏக்கர் வேளாண் நிலங்களும் 500 ஏக்கர் வன நிலங்களும் இதனால் நீரில் மூழ்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.