இது உலக சுகாதார அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் இடையே கையெழுத்தானது.
இது ஒரு அவசர மருத்துவக் குழு முன்முயற்சியைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டி கையெழுத்தானது.
இது மனித உயிர்களுக்கு நெருக்கடி ஏற்படும் போது சுகாதார மற்றும் அவசர மருத்துவச் சேவைகளை வழங்குவதைப் பலப்படுத்தும்.
பேரழிவுகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்கிற வகையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு என்பது ஒரு மனிதாபிமான உதவி அமைப்பாகும்.
இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது.