HCL டெக் என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பதவியிலிருந்து சிவ் நாடார் விலகியுள்ளார்.
இவர் Chairman Emiritus (கௌரவப் பட்டம்) எனும் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
HCL நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநரான C. விஜயகுமார் என்பவரை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பொறுப்பில் 5 ஆண்டு பதவிக் காலத்திற்கு HCL நிறுவனம் நியமித்துள்ளது.
ரோசினி நாடார் மல்ஹோத்ரா HCL நிறுவனம் மற்றும் இயக்குநர் வாரியம் ஆகியவற்றின் தலைவராகவும் ஒரு நிர்வாகம் சாரா இயக்குநராகவும் நியமிக்கப் பட்டு உள்ளார்.
இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு IT நிறுவனத்திற்குத் தலைமை தாங்கும் முதல் பெண் இவரே ஆவார்.