சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் மிகவும் மூத்த பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான N. சங்கரய்யா சமீபத்தில் சென்னையில் காலமானார்.
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) ஸ்தாபன உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
இந்தியப் பொதுவுடைமை கட்சியின் 32 தேசிய சபை உறுப்பினர்களில் அவரும் ஒருவராக இருந்த நிலையில், சித்தாந்த வேறுபாடுகளால் அந்தக் கட்சியை விட்டு வெளியேறியதால் அது 1964 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை (மார்க்சிஸ்ட்) நிறுவ வழி வகுத்தது.
சங்கரய்யா அவர்கள் 1967, 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1995 முதல் 2002 ஆம் ஆண்டு வரை அந்தக் கட்சியின் மாநிலக் குழு செயலாளராகவும் இருந்தார்.
முன்னதாக 2021 ஆம் ஆண்டில் சங்கரய்யா அவர்களுக்கு முதலமைச்சர் அவர்களால் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.