இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான சுதா மூர்த்தி தனது புதியப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இது "The Sage with Two Horns: Unusual Tales from Mythology” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இது "Unusual Tales from Mythology” தொடரின் 5வது மற்றும் கடைசிப் புத்தகமாகும்.
இந்தத் தொடரில் அரசர்கள் மற்றும் அரசிகள், தெய்வங்கள் மற்றும் பெண் தெய்வங்கள், முனிவர்கள் மற்றும் ஞானம் பெற்ற அசாதாரண ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் கதைகள் இடம் பெற்றுள்ளன.