பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் பத்ம விபூசன் விருது பெற்றவருமான சுந்தர்லால் பகுகுணா அவர்கள் சமீபத்தில் காலமானார்.
இவர் சிப்கோ இயக்கத்தினை முன்னின்று நடத்தியவர்களுள் ஒருவராவார்.
வாழ்நாள் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலராகவே இருந்து சேவை ஆற்றிய இவர் சிப்கோ இயக்கத்தினைத் தொடங்கியப் பெருமைக்குரியவராவார்.
சிப்கோ இயக்கமானது 1970களில் கர்வால் பகுதியை உலுக்கிய ஒரு சம்பவமாகும்.
இது மரங்களைக் கட்டிப் பிடித்து அவற்றை வெட்ட விடாமல் தடுக்க அந்தப் பகுதியின் கிராம மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கடைமட்ட நிலையிலிருந்து எழுப்பப் பட்ட ஒரு இயக்கமாகும்.
பிறகு 1990களில் தெஹ்ரி அணை கட்டுவதற்கு எதிரான இயக்கத்திற்கும் இவர் தலைமை ஏற்று, அதற்காக 1995 ஆம் ஆண்டில் சிறை தண்டனையும் பெற்றார்.